"அனர்த்தங்களிலிருந்து நாம் மீழும் ஒரு படி நிலயே இப்பொன்விழா"
மண்முனப்பற்று கல்விக் கோட்டத்தில் தலைமைப் பாடசாலையாகக் கருதப்படுகின்ற மட்டு/ஆரையம்பதி மகாவித்தியாலயம் தனது 50ஆவது ஆண்டு நிறைவை கடந்த 26ந் திகதி கொண்டாடியது. இப்பொழுது விழாவின் சிறப்பு நிகள்வுகளாக "ஆரணி" நூல் வெளியீடும், பரிசளிப்பு
விழாவும் இடம்பெற்றன.
சூறாவளி, யுத்த நிலை, மக்கள் இடம் பெயர்வு, சுனாமி போன்ற அனர்த்தங்களிக்லிருந்து நாங்கள் மெதுவாக மீண்டு கொண்டிருக்கும்
ஒரு படி நிலையாக இவ்விழாவைக் கருதலாம்.
தற்போது சுமார் ஓராயிரம் மாணவர்களுடன் கல்வித்துறையில் சகல பிரிவுகளையும் தன்னகத்தே கொண்டு இப்பாடசாலை விளங்குகின்றது. கல்வியைப்பொறுத்தமட்டில் எல்லா மட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை பெற்று வருகிறது.
பௌதிக வளங்களைப்பொறுத்து அண்மைக்காலத்தில் கணணி ஆய்வு கூடம், பல்லூடக கூடம், வகுப்பறை கொண்ட இரு மாடி கட்டிடம்
என்பன அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆரம்ப காலக் கூட்டங்கள் யாவும் திருத்த வேலை செய்யப்பட்டு, வகுப்பறைகளகப் பிரிக்கப்பட்டுள்ளன எனினும் இப்பாடசாலைக்கென ஒர் ஒன்று கூடல் மண்டபம் இல்லாத்து பெருங் குறையாகவே இருந்து வருகின்றது.
கடந்த 2008.05.01 முதல் 1AB பாடசாலையாக இப்பாடசாலை தரமுயர்த்தப்பட்டு க.பொ.த. (உ/த) வகுப்பில் விஞ்ஞானம் கற்பிப்பதற்கும் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
மண்முனைப்பற்றுப் பிரதேசத்தில் உயர்ந்த வகுப்பில் விஞ்ஞானம் கற்பிப்பத்ற்கு என உள்ள ஒரே பாடசாலை ஆரையம்பதி மகா/வித்தியாலயமாகும்.
பொன்விழா நிகழ்வை திறம்பட நடத்தி முடிப்பதற்கு உதவிய "ஆரணி" மலர் வெளீயீட்டிற்க்காக அரும்பாடுபட்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மலர்க்குழுவினையும், அழகாக மலரினை வடிவமைத்து அச்சிட்டு வெளியிட உதவும் கணணி நிலைய ஆசிரியர்களையும் மனமார வாழ்த்துகிறேன்.
திரு.மா.தங்கவடிவேல்
பாடசாலை அதிபர்.
"பாடசாலையின் வரலாற்றுப்படிகள்"
1. மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயம் 1957-10-23ந் திகதியன்று கலவன் பாடசலையாக ஆரம்பிக்கப்பட்டது.
2. ஆரம்பத்தில் 12 ஆசிரியர்களும், 150 மாணவர்களும் கற்றல் கற்பித்தல் னடவடிக்கையில் ஈடுபட்டனர்.
3. தற்போது இப்பாடசாலையில் 40ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 05 கல்விசாரா ஊழியர்களோடோடு, 900 மாணவர்களையும் கொண்டு
இயங்குகின்றது.
4. படிப்படியாக முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் 1978ம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளித் தாக்கத்தினால் இப்பாடசாலை மிகக் கடுமையாகப்
பாதிக்கப்பட்டது.
5.1990ம் ஆண்டு இப்பாடசாலை கொத்தணிப்பாலசாலையாக திறமையாகக் செயற்பட்டு வந்தது.
6. 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக இப்பாடசலை சுமார் 2 வருடகாலமாக பாதுகாப்புப் படையினரின் முகமாக காணப்பட்டது.
7. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ந் திகதி நிகழ்ந்த "சுனாமி" கடற் கோள்அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அகதி முகமாக இப்படசாலைசுமார் 3 மாத காலம் இயங்கியது.
8. 2006ம் ஆண்டில் இப்பாடசாலையில் ஜனாதிபதி நடமாடும் செயலகம் நடாத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அதன்மூலம் நன்மையடைந்தனர்.
9. 2006ல் நிகழ்ந்த பரிசளிப்பு விழாவின் போது பாடசாலையின் முக்கிகிய நிகழ்வாக 50 வருட கால நிறைவில் முதன்முஏறையாக "ஆரணி" எனும்
நூல் கன்னி மலராக வெளியிடப்பட்டது.
10. 2007ம் ஆண்டு நாட்டில் காணப்பட்ட யுத்த சூழல் காரணமாக ஏற்பட்ட பிராந்திய இடப்பெயர்வின் போது இப்படசாலை ஓர் இடைத் தங்கல்
முகமாக சுமார் 4 மாத காலம் இயங்கியது.
11. பல்வேறுபட்ட தடைகள் இடர்பாடுகளை எதிர்கொண்டு தொடர்ந்தும் கலவன் பாடசாலையாக இயங்கும் இப்பாடசாலை, 2008-05-01ந் திகதியன்று 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு தனது பொன்விழா நிகழ்வில் கால்பதிக்கின்றது.
12. தற்போது இப்படசாலையில் புதிதாக உயர்ந்த வகுப்பு விஞான ஆய்வு கூடம், கணணி ஆய்வு கூடம், பல்லூடாக அறை, இருமாடிகள் கொண்ட
ந்ர்வாக கட்டடம் நிர்மாணப்பணிகள் யாவும் முடிவடையும் தறுவாயில் உள்ளது.
13. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த(சா/த) (உ/த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மாணவர்கள் பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகளில் தற்போது படித்துக்கொண்டிரிக்கிறார்கள்.
14. அடுத்த ஆண்டு முதல் விஞ்ஞான பிரிவில் மாணவர்கள் கல்விகற்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
15. தற்பொளுது தனது 50வது வருட நிறைவு நிகழ்வில் பொன்விழா காண அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு 2008-10-23ந் திகதியன்று
வித்தியாலய அதிபர் திரு.மா.தங்கவடிவேல் அவர்களது தலைமயில் விழாக்கோலம் பூண்டு நிற்கின்றது.
"கூட்டுச்செயற்பாட்டின் வளர்ச்சிக்கு இப்பாடசாலை
ஒரு எடுத்துக்காட்டு"
ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில்
வெளிவரும்"ஆரணி" சிறப்பிதழ்
இவ்வருடம் பொன்விழா
சிறப்பு மலராக வெளிவருகிறது.
இதன் ஆசிரியர் சிறப்பாக
இம்மலரை வடிவமைத்துள்ளார்.
இதிலடங்கியுள்ள பாடசாலையின்
வரலாறு வருங்காலச்சந்ததியினருக்கு
மிகவும் சிறந்த பொக்கிஷமாக
அமந்துள்ளது. இம்மலரில்
காணப்படும் ஆக்கங்களைத் தமிழ், ஆங்கிலமொழிகளில் எழுதியுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பெரியோர்களைப் பாரட்டுகிறேன். கல்விக்
கொள்கையில் உள்ள தேடல் அம்மலரில் பிரதிபலிக்கின்றது.
இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளவெளியீட்டுக் குழுவினர்களை
நன்கு நெறிப்படுத்திய அதிபர் அவர்களைப் பாராட்டுகிறேன். இம் முயற்சியானது எதிர்காலத்திலும் தொடர வேண்டுமென
ஆசி கூறுகின்றேன்.
திரு.தா.நித்தியானந்தன்,
கோட்டக்கல்விப் பணிப்பாளர்,
மண்முனைப்பற்று.
"எதிர்காலத்திலும் முயற்சிகள் தொடர வேண்டும்"
ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில்
வெளிவரும்"ஆரணி" சிறப்பிதழ்
இவ்வருடம் பொன்விழா
சிறப்பு மலராக வெளிவருகிறது.
இதன் ஆசிரியர் சிறப்பாக
இம்மலரை வடிவமைத்துள்ளார்.
இதிலடங்கியுள்ள பாடசாலையின்
வரலாறு வருங்காலச்சந்ததியினருக்கு
மிகவும் சிறந்த பொக்கிஷமாக
அமந்துள்ளது. இம்மலரில்
காணப்படும் ஆக்கங்களைத் தமிழ், ஆங்கிலமொழிகளில் எழுதியுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பெரியோர்களைப் பாரட்டுகிறேன். கல்விக்
கொள்கையில் உள்ள தேடல் அம்மலரில் பிரதிபலிக்கின்றது.
இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளவெளியீட்டுக் குழுவினர்களை
நன்கு நெறிப்படுத்திய அதிபர் அவர்களைப் பாராட்டுகிறேன். இம் முயற்சியானது எதிர்காலத்திலும் தொடர வேண்டுமென
ஆசி கூறுகின்றேன்.
திரு.தா.நித்தியானந்தன்,
கோட்டக்கல்விப் பணிப்பாளர்,
மண்முனைப்பற்று.
"தடைகளே பாடசாலையின் வளர்ச்சிப்படிகள்"
"ஆரணி" பொன்விழாச்சிறப்பு
மலருக்கு வாழ்த்துச் செய்தி
வழங்க கிடைத்தமைக்குப்
பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
"எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான்" இதற்கமைய
இறை பணியாற்றிய பலரது
முயற்சிகளையும், முதல்களையும்,
கொண்டு இப்பாடசாலை உருவானதயிட்டு திரு.முனான்னானா
அவர்களின் கட்டுரை எடுத்துயம்புகிறது.
ஏற்பட்ட தடைகள் எல்லாம் வளர்ச்சிக்கான படிகள் ஆக்கப்பட்டுள்ளன. அண்மைகால நாட்டின் அமதியின்மை பாடசாலையின் வளார்ச்சியில் பாதிப்புக்களை ஏற்படுத்திய போதிலும்கடமையற்றிய ஆசிரியர்களின். அதிபர்களின், அர்ப்பணிப்பினால் பாடசாலை மிளிரிந்து கொண்டிருக்கிறது. ஒரு 1AB பாடசாலையாக இயங்க வேண்டும், இதனூடாக இப்பிரதேச மாணவர்கள் பஸ் அறி நகர்ப்புறப் பாடாசாலைக்குச்செல்லாமல்
இங்கேயே கல்வி தேர்ச்சி பெற வேண்டும், என்பது
ஆரணியூடாக எனது செய்தியாக அமையட்டும்.
ஆரணி என்ற குழந்தையும், அத்னை ஈன்ற தாயும் ஆரோக்கியத்துடன் வளர்ந்து, சிறப்படைந்து சமூகத்திற்குச் சேவையாற்ற இறைவனின் ஆசியை வேண்டி, எனது நல் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரு.கே.பாஸ்கரன்,
பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிரவாகம்),
வலையக்கல்வி அலுவலகம்,
மட்டக்களப்பு.
கணணி ஆய்வுகூடம்
"ஆரணி மலர் அதிக பொக்கிஷங்களுடன் வெளிவரவிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்"
மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயம்
எதிர்வரும் 2008.10.23ந் திகதியன்று
பொன்விழாவைக்கொண்டாட இருப்பதயிட்டு
பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
பாடசாலையானதுவெறுமனே கற்றல்
கற்பித்தலோடு நிற்காது இணைப்பாட
விதான செயற்பாடுகள் சஞ்சிகை
வெளியீடுகள்என்பவற்றில் கவனம்
செலுத்தி வளர்ச்சி காண வேண்டியது
அவசியமாகும்.இந்த எதிர்பார்ப்புக்களை
எமது வலயத்தில் எமது வலையத்தில்
இவ் வித்தியாலயம் செய்து வருகின்றமை
பாராட்டத்தக்கதாகும்.
அண்மைக்ககாலமாக ஆரையம்பதி மகா வித்தியாலயம் சகல துறைகளிலும் தன் கவனத்தைச் செலுத்தி சவால்களுக்கு முகங்
கொடுத்து வெற்றிப் படிகளில் நடைபோட்டுக் கொண்டிருப்பதைக்
கண்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். ஒருசமூகம் சிந்திக்கத் தொடங்கினால் அதனைத் தடை செய்ய முடியாது
எனச் சொல்லப் படுகின்றது.
அதர்கிணங்க இப்பாடசாலைச் சமூகம் எதிர்காலத்தைப்
பாராட்டுகிறேன். இன்றைய நாளில் வெளிவரவிருக்கும்
ஆரணி சஞ்சிகை அதிக பொக்கிஷங்களுடன் வெளிவர
இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். இதற்கென உழைத்த
ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். சாதனைகள்
படைத்து பரிசில்கள் பெறப்போகும் மாணவச்
செல்வங்களுக்கு என் வாழ்த்து உரித்தாகட்டும்.
திரு.ஏ.எம்.ஈ.போல்,
வலையக்கல்விப் பணிப்பாளர்,
வலையக்கல்வி அலுவலகம்,
மட்டக்களப்பு.
பாடசாலையின் தேவைகள்!
1. மண்முனப்பற்றுப் பிரதெசத்தில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கும் இப்படசாலை, இப்பிரதேசத்தின் முதன்மைப்பாடசாலையாக விளங்கி வருகின்றது.
பிரதேசப்பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி, தமிழ்மொழித்தின நிகழ்வுகள், ஆங்கில மற்றும் சிறுவர் தினம் உள்ளிட்ட அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெறும் ஒர் ஒன்றுகூடல் மண்டபம் இல்லாதது ஒரு பெருங்குறையாகவே காணப்படுகிறது.
2. பாடசாலையோடு இணைந்து அதன் தென்புற எல்லயில் அமைந்திருக்கும் விளையட்டு மைதானத்தை பிரதேச பாடசாலைகள், விளையாட்டு கழ்கங்கள், பிரதேச செயலக விளையாட்டு நிகழ்வுகள் உள்பட அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் இம்மைதானத்திலேயே நடைபெறுகின்றன, போதிலும், இதுவரைகாலமும் இம்மைதானத்திற்கு பார்வையாளர் அரங்கும், சுற்றிவர பாதுகாப்பான மதிலும் அமைக்கப்படாமலேயே காணப்படுகின்றது.
3. பாடசாலயின் நிர்வாக நாடவடிக்கைகளை சிறப்பபாக முன்னெடுத்துச் செல்வதற்கும் நவீன முறையில் கற்றல் கற்ப்பித்தல் நடவடிககைகளை முன்னெடுப்பதற்கும் போட்டோ கொப்பி மெசின் (Photo Copier), மல்ரிமீடியா புறெஜெக்ரர் (Multimedia Projector) ஒன்றும் இதுவரையும் இல்லாததால் மிகவும் சிரமமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது.
பாடசாலை மாணவ தலைவர்கள் / பாடசாலை மாணவ
தலைவர்கள்!
"பொன்விழாவை 'ஆரணி' மலர் அலங்கரிப்பது சிறப்பம்சமாகும்"
கடந்த 50 வருட கால நிறைவின்
பூர்த்தியை கொண்டாடும்
மட்.ஆரையம்பதி மகா
வித்தியாலயத்தின் கல்வி
மற்றும்பௌதீகவள விருத்தியில்,
இப்பாடசாலையில்
சேவையாற்றியபல
அதிபர்களுள் அர்ப்பணிப்பும்,
சேவைமனப்பான்மையும்
அபிவிருத்திப் பாதையில் பாடசாலையை முன்னேற்றிச் செல்ல வேண்டுமென்ற ஆர்வமும் கொண்ட ஓர் அதிபராக
திரு.மா.தங்கவடிவேல் காணப்படுகிறார்.
ஆரம்ப காலத்தில் பாடசாலையின் உள் வீதி; மாணவர்கள், ஆசிரியர்கள் நடக்க முடியாதவாறு மணலும், கற்களும் நிறைந்து காணப்பட்டது. இவ்வீதீயாவது அயராத முயற்சியினால் தற்போது உடல் உனமுற்ற மாணவர்களுக்கும் இலகுவாக வகுப்பறையை சென்றடையக் கூடியவாறு பாதை செப்பனிடப்பட்டுள்ளது. அத்தோடு உப்பாடசாலை 1AB பாடசாலையாகதரமுயர்த்தப்பட்டிருக்கிறது. பலமாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பல்கலைக்கழகம், கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு புலமைப் பரிசில் பரீட்சைகளிலும்
அதுக மாணவர்கள் சித்தி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இப்பொன்விழா நிகழ்வை மேலும் அலங்கரிக்க "ஆரணி"
சிறப்பு மலராக வெளிவரவிருக்கின்றது.
பொன்விழா நிகழ்வை திறம்ப மேற்கொள்வதற்காக அதிபர் தலைமையில் கடுமையாக உழைத்து கொண்டிருக்கும் ஆசிரியர்களையும், மாணவர்களையும், "ஆரணி" மலர் குழுவையும்பாராட்டி வாழ்த்துகிறேன்.
திரு.ஏ.தவராஜா
பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்,
மட்.ஆரையம்பதி மகா வித்தியாலயம்.
"சிறப்புடன் உயர்வுபெற வாழ்த்துகிறேன்"
பொன் விழாக்காணும் இவ்வித்தியாலயம் இறைவன் திருவருளால் சிறப்புடன் உயர்வுற வாழ்துகிறேன். இதன் வளர்ச்சிப்படிகளில் உழைத்த அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கல்விசாரா அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள்அனைவரும் நன்றியோடு நினவுகூரப்படவேண்டியவர்கள்.
ஆரையம்பதி முகத்துவாரத் தெருவில் ஒர் அரச பாடாசாலையின் தெவையுணர்ந்து அதற்கான காணிகளை வழங்கிய அமரர்கள் ப.சு.சுப்பிரமணியம், அவரது மருமகன் கதிர்காமத்தம்பி மற்றும் அமரர்களான த.சி.பூபாலரெத்தினம், குஞ்சித்தம்பி மாஸ்டர், நல்லதம்பி என்று நீளும் பட்டியலில் அநேகர் தமது அர்ப்பணிப்பை நல்கியுள்ளனர். அத்ற்கு உதவியவர்களுள் முன்ணாள் பாரளுமன்ற உறுப்பினர் மஹீம் லெப்பையை மறக்க முடியாது.
கடந்த 50 ஆண்டுகால வறலாற்றில் நினைவுகூரத்தக்க அனைத்து பெரியவர்களும் எம்முள் நிழாலாடுகின்றனர். இவ்வித்தியாலயம் நீடு வாழ்ந்து நாட்டுக்கு நற்பிரச்சனைகளை உருவாக்கி பேரும் புகளும் பெற்றுச் சிறப்பாகவும், இவ்விழாச்சிறப்புறவும், இந்நிகழ்வுகளை முன்னெடுக்கும் அதிபர் உள்ளிட்ட செயலினை மகிழ்க்கவும்
இறையருள் வேண்டி நிற்கின்றேன்.
திரு. காசுபதி நடராஜா (பழைய மாணவன்)
ஓய்வு பெற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளரும்,
விழுது மேம்பாட்டு மையப் பணிப்பாளரும்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்!