பாடசாலையின் வரலாறு
1. மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயம் 1957-10-23ந் திகதியன்று கலவன் பாடசலையாக ஆரம்பிக்கப்பட்டது.
2. ஆரம்பத்தில் 12 ஆசிரியர்களும், 150 மாணவர்களும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
3. தற்போது இப்பாடசாலையில் 40ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 05 கல்விசாரா ஊழியர்களோடோடு, 900 மாணவர்களையும்
கொண்டு இயங்குகின்றது.
4. படிப்படியாக முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் 1978ம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளித் தாக்கத்தினால் இப்பாடசாலை
மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
5.1990ம் ஆண்டு இப்பாடசாலை கொத்தணிப்பாலசாலையாக திறமையாகக் செயற்பட்டு வந்தது.
6. 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக இப்பாடசலை சுமார் 2 வருடகாலமாக பாதுகாப்புப்
படையினரின் முகமாக காணப்பட்டது.
7. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ந் திகதி நிகழ்ந்த "சுனாமி" கடற் கோள்அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அகதி முகமாக இப்படசாலை சுமார் 3 மாத காலம் இயங்கியது.
8. 2006ம் ஆண்டில் இப்பாடசாலையில் ஜனாதிபதி நடமாடும் செயலகம் நடாத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அதன்மூலம் நன்மையடைந்தனர்.
9. 2006ல் நிகழ்ந்த பரிசளிப்பு விழாவின் போது பாடசாலையின் முக்கிகிய நிகழ்வாக 50 வருட கால நிறைவில் முதன்முஏறையாக "ஆரணி" எனும் நூல் கன்னி மலராக வெளியிடப்பட்டது.
10. 2007ம் ஆண்டு நாட்டில் காணப்பட்ட யுத்த சூழல் காரணமாக ஏற்பட்ட பிராந்திய இடப்பெயர்வின் போது இப்படசாலை ஓர் இடைத் தங்கல்முகமாக சுமார் 4 மாத காலம் இயங்கியது.
11. பல்வேறுபட்ட தடைகள் இடர்பாடுகளை எதிர்கொண்டு தொடர்ந்தும் கலவன் பாடசாலையாக இயங்கும் இப்பாடசாலை, 2008-05-01ந் திகதியன்று 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு தனது பொன்விழா நிகழ்வில் கால்பதிக்கின்றது.
12. தற்போது இப்படசாலையில் புதிதாக உயர்ந்த வகுப்பு விஞான ஆய்வு கூடம், கணணி ஆய்வு கூடம், பல்லூடாக அறை, இருமாடிகள் கொண்டநிர்வாக கட்டடம் நிர்மாணப்பணிகள்
யாவும் முடிவடையும் தறுவாயில் உள்ளது.
13. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த(சா/த) (உ/த) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மாணவர்கள் பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகளில் தற்போது படித்துக்கொண்டிரிக்கிறார்கள்.
14. அடுத்ட ஆண்டு முதல் விஞ்ஞான பிரிவில் மாணவர்கள் கல்விகற்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
15. தற்பொளுது தனது 50வது வருட நிறைவு நிகழ்வில் பொன்விழா காண அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு 2008-10-23ந் திகதியன்று வித்தியாலய அதிபர் திரு.மா.தங்கவடிவேல் அவர்களது தலைமயில் விழாக்கோலம் பூண்டு நிற்கின்றது.
பாடசாலை எதிர்பார்த்து நிற்கும் தேவைகள்:
1. மண்முனப்பற்றுப் பிரதெசத்தில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கும் இப்படசாலை, இப்பிரதேசத்தின் முதன்மைப் பாடசாலையாக விளங்கி வருகின்றது. பிரதேசப்பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி, தமிழ்மொழித்தின நிகழ்வுகள், ஆங்கில மற்றும் சிறுவர் தினம் உள்ளிட்ட அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெறும் ஒர் ஒன்றுகூடல் மண்டபம் இல்லாதது ஒரு பெருங்குறையாகவே காணப்படுகிறது.
2. பாடசாலையோடு இணைந்து அதன் தென்புற எல்லயில் அமைந்திருக்கும் விளையட்டு மைதானத்தை பிரதேச பாடசாலைகள், விளையாட்டு கழ்கங்கள், பிரதேச செயலக விளையாட்டு நிகழ்வுகள்
உள்பட அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் இம்மைதானத்திலேயே நடைபெறுகின்றன, போதிலும், இதுவரைகாலமும் இம்மைதானத்திற்கு பார்வையாளர் அரங்கும், சுற்றிவர பாதுகாப்பான மதிலும் அமைக்கப்படாமலேயே காணப்படுகின்றது.
3. பாடசாலயின் நிர்வாக நாடவடிக்கைகளை சிறப்பபாக முன்னெடுத்துச் செல்வதற்கும் நவீன முறையில் கற்றல் கற்ப்பித்தல் நடவடிககைகளை முன்னெடுப்பதற்கும் போட்டோ கொப்பி மெசின் (Photo Copier), மல்ரிமீடியா புறெஜெக்ரர் (Multimedia Projector) ஒன்றும் இதுவரையும் இல்லாததால் மிகவும் சிரமமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது.