என் திசையிலிருந்து...
மண்முனைப்பற்றுப் பிரதேசத்தின் பெருமையைத் தேசியமெங்கும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் மகா வித்தியாலய ஆரணி இரண்டாவது இத்ழ் வெளிவருவது கண்டு ஆனந்தமடைகின்றேன். பெருமை கொள்கின்றேன்.
சின்னக் குழந்தையொன்று தனது பலூன் உடைந்த
பின்னரும் கிடைத்த துண்டொன்றைக் கொண்டு சிறு குமிழ் செய்து விளையாட முயற்சிக்கும் தணியாத ஆசை எமக்குமுண்டு சுனாமியில் அகதிகள் முகாமிப் பல நாட்கள் பாடசாலை மூடப்பட்ட நிலையிலிருந்து மெல்ல மீண்டு கொண்டிருக்கும் ஒரு படி நிலைதான் இரண்டாவது இத்ழ் இதோ உங்கள் கைகளில் தவழுகிரது.
இரண்டாண்டுகளுக்கொருமுறை இச்சஞ்சிகையின் இவ்வண்டிற்கான
ஆசிரியை திருமதி.சு.தவராஜா அவர்களையும் ஆக்கத்திற்கு
அயராது உழைத்த மலர் குழுவினரையும் மனமாரப் பாராட்டுகிறேன்.
திரு.எம்.தங்கவடிவேல்;
வித்தியாலய அதிபர்.
மட்/ஆரையம்பதி ம.வி.
இதயத்திலிருந்து...
"பொன்னான ஆண்டில் பொன்னென
மிளிர வருகிறது எம் 'ஆரணி'"
பாடும் மீன்பாட கன்னலும் செந்நெல்லும் பூத்துக்குலுங்க மட்டுமா நகரின் தெற்கே அமைந்துள்ளது ஆரையூர். இச்சிற்றூரில் பொன்விழாக் காணும் எம் பாடசாலையானது வெளியிடும் வருடாந்த மலர் "ஆரணி", இவ்வருடம் உங்கள் மத்தியில் பொன்விழாச் சிறப்பு மலராகத்தவழ வருவதில் பெரு மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைகின்றேன்.
கல்வியே ஒளிர்ந்து வளர்ந்து வரும் கலைக் கூடமான எம் வித்தியாலயத்தின் மேல்பற்றும் பாசமும் கொண்டுள்ள ஆரயம்பதி வாழ் தமிழ்ப் பாவலர்களும், வித்தகர்களும், முன்னைநாள் சேவையாளர்களூம், எம் அதிபர், ஆசிரியர், மாணவர் ஆகியோரின் ஆக்கங்களைத் தாங்கி இச்சிறப்பு மலர் வெளிவருகிறது. இவ்வாக்கங்கள் அனைத்தும் எம் வித்தியாலயச் சிறப்பினையும் வாசகரின் உள்ளத்தயும் கவர்ந்து அறிவொளி வீசும் என நம்புகிறேன்.
"ஆரணி" மங்கலம் பெற மனமார்ந்து ஆக்கங்கள் வழங்கியும் வாழ்த்துச் செய்தி நல்கியும் சிறப்பித்த நல்நெஞ்சங்களுக்கும் அதிபர்ர் மலராக்க குழுவினர் அனைவரினதும் ஒத்துழைப்பை மனதில் நிறுத்தி ஆரணியை உங்கள்கையில் சமர்ப்பிக்கின்றேன்.
-நன்றி-
இதழாசிரியர்;
திருமதி.சு.தவராஜா
பொன்விழா நிகழ்வும், ஆரணி மலர் வெளியீட்டிற்குமான வாழ்த்துச்செய்தி!
மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயம் எதிர்வரும்
2008.10.23ந் திகதியன்று பொன்விழாவைக்கொண்டாட
இருப்பதயிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். பாடசாலையானது வெறுமனே கற்றல் கற்பித்தலோடு நிற்காது இணைப்பாட விதான செயற்பாடுகள் சஞ்சிகை வெளியீடுகள் என்பவற்றில் கவனம் செலுத்தி வளர்ச்சி காண வேண்டியது அவசியமாகும். இந்த எதிர்பார்ப்புக்களை எமது வலயத்தில் எமது வலையத்தில் இவ் வித்தியாலயம் செய்து வருகின்றமை பாராட்டத்தக்கதாகும். அண்மைக்ககாலமாக ஆரையம்பதி மகா வித்தியாலயம் சகல துறைகளிலும் தன் கவனத்தைச் செலுத்தி சவால்களுக்கு முகங் கொடுத்து வெற்றிப் படிகளில் நடைபோட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு சமூகம் சிந்திக்கத் தொடங்கினால் அதனைத் தடை செய்ய முடியாது எனச்
சொல்லப் படுகின்றது.
அதர்கிணங்க இப்பாடசாலைச் சமூகம் எதிர்காலத்தைப்
பாராட்டுகிறேன். இன்றைய நாளில் வெளிவரவிருக்கும் ஆரணி
சஞ்சிகை அதிக பொக்கிஷங்களுடன் வெளிவர இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். இதற்கென உழைத்த ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். சாதனைகள் படைத்து பரிசில்கள் பெறப்போகும் மாணவச்செல்வங்களுக்கு
என் வாழ்த்து உரித்தாகட்டும்.
திரு.ஏ.எம்.ஈ.போல்,
வலையக்கல்விப் பணிப்பாளர்,
வலையக்கல்வி அலுவலகம்,
மட்டக்களப்பு.
"ஆரணி" சிறப்பு மலருக்கான வாழ்த்துச் செய்தி!
"ஆரணி" பொன்விழாச்சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்க கிடைத்தமைக்குப் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்" இதற்கமைய இறை பணியாற்றிய பலரது யற்சிகளையும், முதல்களையும், கொண்டு இப்பாடசாலை
உருவானதயிட்டு திரு.முனான்னானா
அவர்களின் கட்டுரை எடுத்துயம்புகிறது.
ஏற்பட்ட தடைகள் எல்லாம் வளர்ச்சிக்கான படிகள் ஆக்கப்பட்டுள்ளன. அண்மைகால நாட்டின் அமதியின்மை பாடசாலையின் வளார்ச்சியில் பாதிப்புக்களை ஏற்படுத்திய போதிலும் கடமையற்றிய ஆசிரியர்களின். அதிபர்களின், அர்ப்பணிப்பினால் பாடசாலை மிளிரிந்து கொண்டிருக்கிறது. ஒரு 1AB பாடசாலையாக இயங்க வேண்டும், இதனூடாக இப்பிரதேச மாணவர்கள் பஸ் ஏறி நகர்ப்புறப் பாடாசாலைக்குச்செல்லாமல் இங்கேயே கல்வி தேர்ச்சி பெற வேண்டும், என்பது ஆரணியூடாக எனது செய்தியாக அமையட்டும்.
ஆரணி என்ற குழந்தையும், அத்னை ஈன்ற தாயும் ஆரோக்கியத்துடன் வளர்ந்து, சிறப்படைந்து சமூகத்திற்குச் சேவையாற்ற இறைவனின் ஆசியை வேண்டி, எனது நல் வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கின்றேன்.
திரு.கே.பாஸ்கரன்,
பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிரவாகம்),
வலையக்கல்வி அலுவலகம்,
மட்டக்களப்பு.